நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் உள்பட 709 வாக்குசாவடிகள் பதட்டமானவை - ஆட்சியர் தகவல்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட 709 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் .கருணாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டடபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்க்கு வந்துள்ள வாக்குபதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை வாக்கு பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

பழைய தகவலை அழிக்கும் பணியிலும் வாக்கு பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை சோதனை செய்யும் பணியில் பெல் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கருணாகரன், நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை,தென்காசி, கடையநல்லூர்,சங்கரன் கோவில், அம்பை, ஆலங்குளம், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து 5,053 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 9460 வாக்கு பதிவு இயந்திரங்களும் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், 709 வாக்குசாவடி மையங்கள் மிகவும் பதட்டமானவைகளாக கருதப்படுகின்றன. இவற்றில் தேர்தல் காலத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றார். இந்த வாக்குச்சாவடிகள் தொடர்பான அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications