Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பத்தூரில் வசந்தியால் மானமே போயிடுச்சு.. நள்ளிரவு கதவை திறந்த கனகா.. ஜோலார்பேட்டை மாஸ் பிளான்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் இளம்பெண் செய்த செயல், பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. சமீபகாலமாகவே இளம்பெண்கள் கொலை வழக்குகளில் கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. அதைவிட இவர்கள் போலீசில் எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல், கூலாக தரப்படும் வாக்குமூலங்கள் அதைவிட கலக்கத்தை தந்துவிடுகிறது. ஜோலார்பேட்டையில் அப்படி என்ன நடந்தது?

நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு கொலை நடந்தது.. திருப்பனை பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான வசந்தா கணவரை இழந்தவர்.. பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவிட்டு, வசந்தா மட்டும் தன்னுடைய பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். வசந்தா வீட்டில் உள்ள கோழி கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருடு போயுள்ளது.

Tirupathur Vasanthi Jolarpet

காணாமல் போன எலுமிச்சம் பழம்

அதேபோல 2 நாட்களுக்கு முன்பு எலுமிச்சை பழங்கள் திருடுபோயுள்ளது. இந்த திருட்டை செய்தது, எதிர்வீட்டில் வசிக்கும் இளம்பெண் செல்வரதி என்பது தெரியவந்தது. அதனால், அப்பெண்ணை வசந்தா கண்டித்துள்ளார்.

இதனால் கொந்தளித்து போன செல்வரதி, வீடுபுகுந்து வசந்தாவை தலையணையால் அமுக்கியே கொன்றுவிட்டார். பிறகு இந்த கொலையில் தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நகையை பறித்து, நகைக்காக நடந்த கொலையை போல திசை திருப்பிவிட்டார். பிறகு போலீசில் மொத்த உண்மையையும் சொல்லி, இப்போது சிறையில் உள்ளார் செல்வரதி.

இதேபோல இன்னொரு இளம்பெண் இன்று திருப்பத்தூரிலும் கைதாகி உள்ளார்.. இதுபோலவே நகை பறிப்பும் நடந்துள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ளது மண்டலவாடி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் கனகா.. இவருக்கு 65 வயதாகிறது.. இவரது மகன், வீட்டுக்கு பக்கத்திலேயே , சொந்தமாக வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகிறார்.

தனிமையில் கனகா

எனவே கனகா மட்டும் தன்னுடைய வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.. இந்நிலையில், கடந்த 31ம் தேதி நள்ளிரவு மர்ம நபர் கனகா வீட்டின் கதவை தட்டியிருக்கிறார்.. இதனால் கனகா கதவை திறந்ததுமே, அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவிய அந்த மர்மநபர், துணியால் முகத்தை மூடியிருக்கிறார்.. பிறகு, கட்டையால் கனகாவை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது கழுத்திலிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.. இந்த தாக்குதல் மற்றும் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை துவங்கினார்கள்.. அப்போதுதான், கனகாவின் மருமகள் வசந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது. எனவே, வசந்தியிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், மொத்த உண்மையையும் சொல்லி, போலீசாரையே திணறடித்தார்.

கருத்து வேறுபாடுகள்

அதாவது, மாமியார் கனகாவுக்கும், மருமகள் வசந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வசந்தி, மாமியாரை பழி வாங்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தன்னுடைய மாமன் மகன் மைக்கல்ராஜ் என்ற 21 வயது இளைஞரை வரவழைத்துள்ளார்.

அதன்படி கடந்த 31-ந் தேதி நள்ளிரவு மைக்கல்ராஜ் கனகா வீட்டிற்கு சென்று மிளகாய் பொடி தூவி கட்டையால் அடித்து 4 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார் வசந்தியின் மாமன் மகன் மைக்கேல்ராஜ்.

போட்டுத் தள்ளிய மருமகள்

அதாவது, தன்னுடைய கணவர், மாமியார் பேச்சை கேட்டு நடப்பது கனகாவுக்கு பிடிக்கவில்லையாம்.. அதற்காகவே மாமியாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. சம்பவத்தன்று, மைக்கேல் ராஜூடன் வசந்தியும் சென்றிருக்கிறார்.. நள்ளிரவு கனகா கதவை திறந்ததுமே, அங்குக் காத்திருந்த இருவரும் கனகாவின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், நகைப்பறிப்புக்காக நடந்த கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காகவும் வசந்தி இந்த திட்டத்தை மைக்கேல் ராஜுவிடம் சொல்லியிருக்கிறார். இப்போது, வசந்தி, மைக்கல்ராஜ் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களிடமிருந்து 4 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. கணவர் தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என்பதற்காக, மாமியாரையே மருமகள் போட்டுத் தள்ளிய சம்பவம் திருப்பத்தூரில் திகிலை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+