கழுதை, நாய்க்கு கல்யாணம் செய்து வைத்து காதலர் தினத்தை எதிர்த்த இந்து முன்னணி!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலர்கள் போற்றும் காதலர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஆனால், காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாட்டங்கள் மூலம் கலாச்சாரம் சீரழிக்கப் படுவதாக இந்து முன்னணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று இந்து முன்னணி கட்சியினர் கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட இந்து முன்னணி கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications