ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்.. தமாகா ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்தது?
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதும் இல்லை; யாருக்கும் ஆதரவும் தரப் போவது இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதும் இல்லை; யாருக்கும் ஆதரவு தரப் போவதும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அதிமுகவில் யார் வேட்பாளர் என்பதில் பெரிய யுத்தமே நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தேமுதிக, பாமக இத்தொகுதியில் போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை என அறிவித்துள்ளன. மதிமுக டிசம்பர் 3-ந் தேதிக்குப் பின் முடிவை அறிவிக்க இருக்கிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தமது கட்சி போட்டியிடாது; யாருக்கும் ஆதரவும் தரப் போவதும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.