காங். பாஜக தலைவர்களுக்கு 'கூவம் நதிநீர்' அனுப்புவேன்.. கி. வீரலட்சுமி 'வார்னிங்' #cauvery
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு கூவம் நதிநீரை அனுப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் கி. வீரலட்சுமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீரலட்சுமி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையும் பாஜக கட்சியின் தலைமையும் ஆதரிக்கிறதா அல்லது எதிர்கின்றனவா என்ற தகவலை வரும் 18ம்தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

இல்லை என்றால் இரு தேசிய கட்சி தலைவர்களுக்கும் குடிக்க கூவம் நதி நீர் வழங்க தமிழகத்திலுள்ள காங்கிரஸ் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வருவோம்.
இவ்வாறு வீரலட்சுமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications