நாளை கூடுகிறது தமிழக சட்டசபை.. ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது
சென்னை: இந்த வருடத்தின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் கே.ரோசய்யாவின் உரையுடன் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்காக, சட்டசபை கூட்ட அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றுவார்.
நாளை காலை 11.15 மணிக்கு ரோசய்யா உரையாற்ற உள்ளார். அப்போது, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுவார். அவர் ஆங்கிலத்தில் பேசி முடித்த பிறகு, அந்த உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு கவர்னர், இந்திய அரசமைப்பு பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை, 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு பதிலாக, அன்றைய தினம் காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டி இருக்கிறார். இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு கவர்னர், அன்றே காலை 11.15 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய கூட்டத்தில் ஆளுநர் உரை மட்டுமே இடம் பெறும். அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்படும்.
18 ம் தேதி சட்டசபைக்கு விடுமுறை நாளாகும். அதன் பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். இந்த விவாதம் சுமார் 4 நாட்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நாளில், தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். பின்னர் கூட்டத் தொடர் முடிவடையும்.
இதையடுத்து அடுத்த சில நாட்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் என்று தெரிகிறது.
முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்ற பின்னர் வரப் போகும் முதல் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications