தமிழக விவசாயிகள் தலையில் பேரிடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

காவிரியில் நமக்கான உரிமையை உச்சநீதிமன்றம் நிலைநாட்டுமான என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு- வீடியோ

    தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியாயம் வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முற்றிலும் தமிழகத்தின் நியாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

    இருக்கும் அளவையும் சுப்ரீம் கோர்ட் குறைத்திருப்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க அநீதியாக செயல்பட்டு வரும் கர்நாடகத்தின் செயல்பாட்டையும், நிலைப்பாட்டையும் ஆதரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதே என்று விவசாயிகள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.

    போராட்டங்களுக்கு பலன் இருக்குமா?

    போராட்டங்களுக்கு பலன் இருக்குமா?

    இத்தீர்ப்புக்காக டெல்டா விவசாயிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். காவிரி நதியில் நமக்கான பங்கை முழுமையாக பெற வலியுறுத்தி டெல்லியிலும் டெல்டாவிலும் நடந்து வரும் போராட்டங்களுக்கு பலன் தரும் வகையில் தீர்ப்பு இருக்குமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மொத்தமாக அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது தீர்ப்பு.

    விவசாயிகள் தற்கொலை

    விவசாயிகள் தற்கொலை

    வரலாறு காணாத வகையில் பல நூறு விவசாயிகள் விவசாயம் பொய்த்ததால் மாண்டு போகும் பேரவலம் நிகழ்ந்தது. இன்னமும் காவிரி நீரை நம்பி மட்டுமே டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    மேலாண்மை வாரியத்தில் துரோகம்

    மேலாண்மை வாரியத்தில் துரோகம்

    நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால் மத்திய பாஜக அரசு தமிழர்களை வஞ்சிப்பதற்காகவே மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றது.

    அநீதியான தீர்ப்பு

    அநீதியான தீர்ப்பு

    இப்போது காவிரி வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வந்துள்ளது. இதை தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. நியாயமாகவே நடந்து கொள்ளாத கர்நாடகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

    பெரும் கேள்விக்குறி

    பெரும் கேள்விக்குறி

    காவிரி நதியை நம்பித்தான் நெற்களஞ்சியமான டெல்டா பாசனப் பகுதி இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகாவின் வஞ்சனையில் முப்போகம் விளைச்சல் கண்ட டெல்டா ஒரு போக சாகுபடிக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+