தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு .. பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை
கருணாநிதி மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கலைஞர் கருணாநிதி காலமானார் Karunanidhi is no more #Karunanidhi
சென்னை: கருணாநிதி மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. என்றும் நாளை அரசு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து வயது மூப்பின் காரணமாக அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இன்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். இவரது மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுவையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரைக் கம்பத்தில் திமுக கொடி: கருணாநிதியின் வீட்டில் அரைக் கம்பத்தில் திமுக கொடிகள் பறக்கின்றன.












Click it and Unblock the Notifications