For Daily Alerts
Just In
ஜெ. பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு
ஜெயலலிதா பிறந்தநாளில் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களின் வழக்குகளுக்கேற்ப ஜெயலலிதா பிறந்த நாளில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று வருபவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர். அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளன்று சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் அவர்களின் வழக்குகளின் தன்மைக்கேற்ப விடுவிக்கப்படவுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டு சிறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களையும் விடுவிக்க முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
Comments
English summary
Tamilnadu Government decides to release prisoners who is in prison for more than 10 years.
Story first published: Monday, February 5, 2018, 19:11 [IST]