அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? ஊதிய விகிதங்களை மாற்ற ஐவர் குழு அமைத்தது தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7வது ஊதியக் குழு அடிப்படையில் இந்தக் குழு ஊதிய உயர்வை பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி கடந்த 3 நாட்களாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது ஊதியக் குழு அடிப்படையில் ஊதிய உயர்வை இந்தக் குழு பரிந்துரைக்கும் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்துக்குள் இந்தக்குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை முதல்வராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டு அறிவிப்புகளை வெளியிட்டார். நேற்று விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் வகையில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அன்று vs இன்று.. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் சந்தித்த பெரிய மாற்றம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications