டாஸ்மாக் ஊழியர்களுக்கு "சியர்ஸ்" செய்தி.. சம்பளத்தை உயர்த்தியது தமிழக அரசு!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தற்போது வாங்கும் ஊதியத்துடன் ரூ.2000 வரை உயர்த்தி வழங்கப்படும் என்றும் இனி ஊக்கத்தொகை வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் கண்காணிப்பாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் உள்ளிட்ட நிலைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஊழியர்கள் பணியிழந்துள்ளனர். மேலும் புதிதாக கடை வைக்கவும் தமிழகத்தில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கண்காணிப்பாளருக்கு மாத ஊதியம் ரூ.7,500-லிருந்து ரூ.9,000-மும், விற்பனையாளருக்கு ரூ.5,600-லிருந்து ரூ.7,500-மும், உதவி விற்பனையாளருக்கு ரூ. 4,200-லிருந்து ரூ.6,500-மும் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வானது வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை இனி வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications