இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிரம் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை சிறையில் வாடும் 126 தமிழக மீனவர்களை தீபாவளிக்கு முன்னதாக விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இலங்கை சிறையில் வாடும் 126 தமிழக மீனவர்களை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 126 தமிழக மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் இருக்கிறார்கள். அவர்களுடைய 47 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள துறைமுகங்களில் பராமரிப்பில்லாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

tn government try to fishermen release

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு பலமுறை தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் விடுதலை மட்டுமல்லாமல், கச்சத்தீவை மீட்பதும், தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் அனைவரையும் தீபாவளிக்கு முன்பு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு, மத்திய அரசாங்கத்தை தொடர்பு கொண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+