இனி "வணக்கத்துக்குரிய மேயர்"-க்கு பதிலாக 'மாண்புமிகு மேயர்" : தமிழக அரசு உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி மேயர்களை "வணக்கத்துக்குரிய மேயர்" என்று அழைப்பதற்கு பதிலாக "மாண்புமிகு மேயர்" என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச்செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவு:

TN govt orders to address the Mayor

மாநகராட்சி மேயர்கள் மற்றும் துணை மேயர்களை அழைப்பது குறித்தும், அவர்களுக்கு பதவிக்காலத்தில் வாங்க வேண்டிய வசதிகள் குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

14.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் மாநகராட்சி மேயரை ‘மாண்புமிகு மேயர்' அல்லது ‘மாண்புமிகு மன்றத் தலைவர்' அல்லது மன்றத்தலைவி என்று அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

20.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, ‘மாண்புமிகு மேயர்' என்று அழைக்கும் முறை ரத்து செய்யப்பட்டது. பழையபடி அவர்களை ‘வணக்கத்துக்குரிய மேயர்' என்று அழைக்கவேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

தற்போது 10.12.14 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைப்படி,, ‘வணக்கத்துக்குரிய மேயர்' என்று அழைக்கும் நடைமுறைக்குப் பதிலாக ‘மாண்புமிகு மேயர்' என்று அழைக்கவேண்டும் என்று அரசு கருதி அப்படியே ஆணையிடுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+