ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு புகார் வழக்கு: தூசு தட்டும் தமிழக அரசு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சமரசம் எட்டப்பட்டதையடுத்து, வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்நிலையில், ஸ்டாலின், அவரது உதயநிதி மீதான நில அபகரிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், வழக்கில் சமரசம் ஏற்பட்டாலும் குற்ற வழக்கு என்பதால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்படவில்லை என்றும், புகார் அளித்தவரே நீதிபதி முன் மிரட்டல் குறித்து வாக்குமூலம் தந்துள்ளார் என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications