குறைந்த விலையில் துவரம் பருப்பு... சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் விற்பனை தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு ரூ.110 விலையில் விற்பனை தொடங்கியுள்ளது.
போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பதுக்கல்காரர்கள், பருப்பு வகைகளைப் பதுக்கி, தட்டுப்பாட்டை அதிகரித்து மேலும் விலையை உயர்த்தினர். தற்போது சந்தையில் சில்லறை விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ. 200ஐத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்தல், பருப்பு வகைகளைப் பதுக்குவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. .
இந்நிலையில், குறைந்த விலையில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் 91 கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 110 விலையில் துவரம் பருப்பு விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
சென்னையில் மட்டும் 56 இடங்களில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்பட உள்ளன. டி.யூ.சி.எஸ்., வட சென்னை, சிந்தாமணி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் 36 கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. 20 அமுதம் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடைகள் அனைத்தும் காலை 10 முதல் இரவு 8 வரை செயல்படும்.
இந்த துவரம் பருப்பு அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளாக விற்கப்படும். அரை கிலோ ரூ.55-ம், ஒரு கிலோ ரூ.110-க்கும் கிடைக்கும்.
தீபாவளிப் பண்டிகை விரைவில் கொண்டாடப்பட உள்ளதாலும், கடைகளில் விலை அதிகமாக இருப்பதாலும் கூட்டுறவு அங்காடிகளில் துவரம் பருப்பு வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே சில கடைகளில் முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications