துபாயில் பரிதவிக்கும் 15 தமிழர்கள்... மீட்க நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்
சென்னை: துபாயில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் அங்கு கொத்தடிமை போல நடத்தப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசானது உடனடியாகத் தலையிட்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக அந்த 15 தமிழர்களையும் மீட்பதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
துபாய், அபுதாபியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் அங்குச் சிக்குண்டு தாங்கொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனமானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலிலிருந்து ஊதியத்தை வழங்காது இழுத்தடித்து வந்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதத்தோடு அவர்கள் 15 பேருக்கும் ஒப்பந்தக்காலமும், விசா தேதியும் முடிந்துவிட்டது. ஆனால், அவர்கள் பணிபுரியும் நிறுவனமோ நாட்டுக்கும் திருப்பி அனுப்பாது, ஊதியத்தையும் வழங்காது கொத்தடிமைகள் போல அவர்களை வைத்து வேலை வாங்கி வந்திருக்கிறது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை;

கொத்தடிமை
குடும்பப்பாரத்தைச் சுமக்கவும், வறுமையின் கோரப்பிடியிலிருந்து தங்களை மீட்கவும் ஆயிரம் கனவுகளோடு அந்நிய தேசங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற தமிழக இளைஞர்கள் அங்குக் கொத்தடிமை போல நடத்தப்படுகிற செய்திகள் அந்நியத் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் குறித்து அச்சத்தைத் தருகிறது.

துன்ப துயரங்கள்
துபாய், அபுதாபியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் அங்குச் சிக்குண்டு தாங்கொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகியுள்ள செய்தி மிகுந்த மன வேதனையையும், கவலையையும் அளிக்கிறது.

ஊதியம் வழங்கவில்லை
இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனமானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலிலிருந்து ஊதியத்தை வழங்காது இழுத்தடித்து வந்திருக்கிறது. எத்தனையோ முறை கேட்டும் அதற்கு உரிய பதில் அளிக்காது காலத்தைக் கடத்தி வந்திருகிறது.

ஒப்பந்த காலம் முடிந்து விட்டது
மேலும், கடந்த ஜனவரி மாதத்தோடு அவர்கள் 15 பேருக்கும் ஒப்பந்தக்காலமும், விசா தேதியும் முடிந்துவிட்டது. ஆனால், அவர்கள் பணிபுரியும் நிறுவனமோ நாட்டுக்கும் திருப்பி அனுப்பாது, ஊதியத்தையும் வழங்காது கொத்தடிமைகள் போல அவர்களை வைத்து வேலை வாங்கி வந்திருக்கிறது.

சிரமத்துடன் வாழ்க்கை
இதற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் வாயிலாகத் தீர்வுகாண பலமுறை முயற்சித்தும் எந்தப்பயனும் கிட்டவில்லை. இதனால், அவர்களது அத்திவாசியத் தேவைகளுக்குக்கூடப் பணமில்லாது சிரமப்பட்டு நாட்களை நகர்த்தி வந்திருக்கிறார்கள். அவர்களையே நம்பியே வாழ்ந்து வந்த தமிழகத்திலுள்ள அவர்களது குடும்பங்களும் அன்றாட உணவுத் தேவைக்கும், அத்தியாவசியச் செலவுகளுக்கும் வழியில்லாது பல மாதங்களாக அல்லாடி வருகிறது.

நடவடிக்கையைத் துரிதப்படுத்துக
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசானது உடனடியாகத் தலையிட்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக அந்த 15 தமிழர்களையும் மீட்பதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு வர வேண்டிய ஊதியத் தொகையையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாது, வெளிநாட்டில் புலம்பெயர்ந்து பணிபுரியும் தமிழர்களுக்கு எனத் தனி அமைச்சகம் அமைத்து அவர்களது நலன்காத்திட வழிவகைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications