நெல், மஞ்சள் உற்பத்தியில் ஆந்திராவிற்கு அடுத்த இடத்தில் தமிழகம்!- நிர்மலா சீதாராமன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெல், மஞ்சள் உற்பத்தியில் ஆந்திர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகளின் நிலை கவலையளிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் நிலையை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உப்பு உற்பத்தியை மேம்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.
மேலும், நெல், மஞ்சள் உற்பத்தியில் ஆந்திர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் முன்னிலை வகிப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், காவிரி உள்ளிட்ட தேசியப் பிரச்னைகளில் மத்திய அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications