மேகதாது: எதிர்த்து இன்று வாதிடுகிறது தமிழகம்..சுப்ரீம் கோர்ட்டில் நேரில் பார்க்கிறார் சி.வி.சண்முகம்
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்க்கும் மனு மீதான விவாதத்தில் இன்று தமிழகம் தனது வாதத்தை எடுத்து வைக்கிறது.
சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாட உள்ளார். அதை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிடவுள்ளார்.
கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.
அதில் தமிழகத்துக்கு அதிகமான தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று வெளியானதால் இதை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேகதாது அணை
மேலும் தமிழகத்துக்கு அதிக அளவிலான தண்ணீர் விடவேண்டும் என்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் மட்டுமே முடியும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இதை எதிர்த்து தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்துக்கு பாதிப்பில்லாத...
இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் கடந்த சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் தண்ணீர் விடுவதை மேற்பார்வை குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு கண்காணிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

காவிரி நதி நீர்
இதை கிட்டத்தட்ட ஆமோதிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதம் இருந்தது. இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக வழக்கறிஞர் வாதிடவுள்ளார். அதை நேரில் காண சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செல்லவுள்ளார்.

தமிழக அரசு அனுமதிக்காது
மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, அதிருப்தியைக் குறைக்கும் வகையில் வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட உள்ளதாக தெரிகிறது. இன்றைய வாதத்தின்போது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications