மேகதாது: எதிர்த்து இன்று வாதிடுகிறது தமிழகம்..சுப்ரீம் கோர்ட்டில் நேரில் பார்க்கிறார் சி.வி.சண்முகம்
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்க்கும் மனு மீதான விவாதத்தில் இன்று தமிழகம் தனது வாதத்தை எடுத்து வைக்கிறது.
சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாட உள்ளார். அதை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிடவுள்ளார்.
கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.
அதில் தமிழகத்துக்கு அதிகமான தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று வெளியானதால் இதை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேகதாது அணை
மேலும் தமிழகத்துக்கு அதிக அளவிலான தண்ணீர் விடவேண்டும் என்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் மட்டுமே முடியும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இதை எதிர்த்து தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்துக்கு பாதிப்பில்லாத...
இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் கடந்த சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் தண்ணீர் விடுவதை மேற்பார்வை குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு கண்காணிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

காவிரி நதி நீர்
இதை கிட்டத்தட்ட ஆமோதிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதம் இருந்தது. இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக வழக்கறிஞர் வாதிடவுள்ளார். அதை நேரில் காண சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செல்லவுள்ளார்.

தமிழக அரசு அனுமதிக்காது
மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, அதிருப்தியைக் குறைக்கும் வகையில் வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட உள்ளதாக தெரிகிறது. இன்றைய வாதத்தின்போது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications