மீண்டும் 'சங்கரராமன்' வழக்கு: ரவிசுப்பிரமணியம் புகார்- காஞ்சி ஜெயேந்திரரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு
சென்னை: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான ரவிசுப்பிரமணியம் தமது உயிருக்கு ஆபத்து என கொடுத்த புகாரின் பேரில் காஞ்சி ஜெயேந்திரரை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஞ்சி வரதராஜபொருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு இரண்டிலும் கைது செய்யப்பட்டு இரு வழக்குகளிலும் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளித்தார் ரவி சுப்பிரமணியம். பின்னர் ரவி சுப்பிரமணியம் பிறழ்சாட்சியானார்.

இந்த வழக்கில் தொடர்புடைய தாதாக்கள் அப்பு மற்றும் கதிரவன் உயிரிழந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தன்னை அப்பு, கதிரவன் ஆகியோர்தான் பிறழ்சாட்சியாக மாறுமாறு மிரட்டினர் என்றார் ரவி சுப்பிரமணியம். மேலும் அப்படி தாம் பிறழ்சாட்சியானதால் சங்கரராமனை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட செயலை என் மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ரவி சுப்பிரமணியம் கூறியிருந்தார்.
இது குறித்து அரசு வழக்கறிஞரையும் ரவி சுப்பிரமணியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தம்மை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மிரட்டியதாகவும் தமது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி முதல்வரின் தனிப் பிரிவில் ரவி சுப்பிரமணியம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், ஜெயேந்திரர் மற்றும் அவரது ஆட்கள் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லப் போகிறாயா, உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்றும் சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என்றும் மிரட்டினர் என்றும் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயேந்திரர், ராமச்சந்திரன், போலீஸ் கண்ணன், சுந்தரேச அய்யர் ஆகியோர் தான் முக்கிய காரணம். ஆகையால் ஜெயேந்திரர், சுந்ரேசய்யர் ஆகியவர்களின் ஜாமீனை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது காஞ்சி ஜெயேந்திரரை அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications