இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு போனால் சசியால் முதல்வராக முடியாது!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தாலே அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உருவாகும்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தால் அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவால் முதல்வராக முடியாத நிலை உருவாகும்.
தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் கட்சிகளின் பலம் விவரம்:

அதிமுக கூட்டணி: 136
அதிமுக - 133
கொங்கு இளைஞர் பேரவை-1
மக்கள் ஜனநாயக கட்சி- 1
முக்குலத்தோர் புலிப் படை-1
ஜெயலலிதா நீங்கலாக மிச்சமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை- 135
தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 129
முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 117
ஆகையால் தற்போதைய நிலையில் மேலும் 13 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தந்துவிட்டால் சசிகலாவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அவரால் முதல்வராக முடியாது. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு கவிழும் நிலை உருவாகும்.












Click it and Unblock the Notifications