அப்பாடா! ரூபாய் நோட்டு... மத்திய அரசுக்கு எதிராக ஒருவழியாக வாய் திறந்த தமிழக அரசு!
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கூட்டுறவு வங்கிகள் முடங்கிப் போய்விட்டதாக மத்திய அரசு மீது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
500, 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகளை வங்கிகள், கிராமப்புற வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது ரிசர்வ் வங்கி. ஆனால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் இந்த செல்லாத நோட்டுகளை வாங்க அனுமதிக்கவில்லை.
இதனால் கிராமப்புற ஏழை விவசாயிகள் ஒரு வாரமாக வங்கிகளுக்கு சென்று ஏமாந்து திரும்பிவிட்டனர். அத்துடன் தொடக்க கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முற்றாக முடங்கிப் போனது. இதனால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

மவுனியாக...
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது. நமது ஒன் இந்தியா தமிழ் இணையத்திலும் நேற்று இது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது.

செல்லூர் ராஜூ
இதனிடையே கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

முடங்கிய கூட்டுறவு சங்கங்கள்
500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு மதிப்பில்லை என மத்திய அரசு அறிவித்ததால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கூட்டுறவுத்துறை முடங்கிவிட்டது. ரூ6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தி பாதிப்பு
இதனால் தமிழகத்தில் உணவு உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

4,477 வங்கிகள்
தமிழகத்தில் உள்ள 4, 477 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளன.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications