சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை லேசான மழை !
சென்னை: அண்மையில் பெய்த கனமழையின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மாலை லேசான மழை பெய்தது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழைக்கு ஏற்பட்ட வெள்ளச் சேதத்தில் இருந்து சென்னை மற்றும் கடலூர் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்வில்லை.

மழை ஓய்ந்து மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இன்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதன் காரணாக பெரு மூச்சு விட்ட மக்கள் மீண்டும் அந்த கோர சம்பவத்தை நினைத்து பெரு மூச்சு விட்ட நிலையில் அப்பாட இது சாரல் மழை தான் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி, பழவேற்காடு, பட்டினபாக்கம், அடையாறு, துரைப்பாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications