வெயிலடிக்குதேன்னு வெளியே குடை இல்லாம போகாதீங்க..ஜில்லுன்னு மழை பெய்யுமாம்..உங்க ஊர் இருக்கா?
சென்னை: கோடை காலத்தில் சுள்ளுன்னு வெயில் அடிக்கிறதே என்று நம்பி வெளியே கிளம்பி விடாதீர்கள். ஜில்லென்று கோடை மழை இடி மின்னலுடன் பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 24 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்த நிலையில் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பீளமேடு, சிங்காநல்லூர், காந்திபுரம், ராமநாதபுரம், லட்சுமி மில்ஸ், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடை மழை பெய்து வெப்பம் தணிந்துள்ளதால் கோவை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதே போல தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. அதனைப் பார்த்து பல மாவட்ட மக்களும் எங்கள் ஊருக்கு மழை வருமா? வெப்பம் தணியுமா என்று ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

அவர்களின் மன வாட்டத்தை போக்கும் வகையில் கோடை வெயிலுக்கு இதமான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications