திருவிடந்தை ராணுவ கண்காட்சி: சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அறிவிப்பு
திருவிடந்தை ராணுவ தளவாட கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: திருவிடந்தை ராணுவ தளவாட கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ராணுவ தளவாட கண்காட்சியை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈசிஆர் சாலையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறும் திடலை ஒட்டிய திருவிடந்தை, வடநெம்மேளி, கோவளம் ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications