திருச்சி தினமலர் வெளியீட்டாளர் ராகவன் காலமானார்
தினமலர் பங்குதாரரும், திருச்சி தினமலர் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியருமான ராகவன் காலமானார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தினமலர் பங்குதாரரும், திருச்சி தினமலர் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியருமான ராகவன் காலமானார். அவருக்கு வயது 79
தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் 4வது மகன் இரா.ராகவன். இவர் திருச்சி தினமலர் வெளியிட்டாளர் ஆவார்.

முதலில் திருச்சி தினமலரின் விற்பனை பிரிவை பார்த்துக்கொண்ட அவர் அதிக பிரதிகளை விற்பனை செய்ய பெரும் உறுதுணையாக இருந்தார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் நாளை மாலை 3 மணியளவில் திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஆர்.ஆர். ராமசுப்பு, ஆர்.ஆர். கோபால்ஜி ஆகிய மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications