சிறை வாசலில் வைத்து இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த கைதியின் மனைவி!
திருச்சி : திருச்சி மத்திய சிறை வாசலில்வைத்து குளித்தலை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் என்பவரை ஒரு கைதியின் மனைவி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தமிழ்ச்சோலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). இவர் திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ராமச்சந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமச்சந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதற்கிடையில் சிறையில் இருந்த ராமச்சந்திரனுக்கு ஜாமீன் கிடைத்து நேற்று முன்தினம் வெளியில் வர இருந்தார். இதனால் அவர் வெளியில் வந்ததும் மீண்டும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதன்படி இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் சிறை வாசலில் தயாராக நின்றனர்.
அதே நேரத்தில் சிறையில் இருந்து வெளியில் வரும் மகேந்திரனை அழைத்து செல்ல அவரது மனைவி செல்வியும் சிறை வாசலில் நின்றிருந்தார். அப்போது சிறையில் இருந்து வெளியில் வந்த ராமச்சந்திரன் போலீசார் நிற்பதை கண்டதும் தப்பி ஓடினார். அவரை துரத்தி சென்ற போலீசார் மடக்கி பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.
அப்போது ராமச்சந்திரனின் மனைவி செல்வி போலீஸ் ஜீப்பை மறித்து நின்றார். ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கீழே இறங்கி செல்வியிடம் வழி விடுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வி தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி இன்ஸ்பெக்டரை அடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் இன்ஸ்பெக்டர் அதைத் தடுத்து விட்டார். பின்னர் ஜீப்பில் ஏறி வேகமாக சென்று விட்டார்.
இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் அப்பெண், இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்தார் என்று தெரியவில்லை.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications