எம்ஜிஆர், ஜெ., அண்ணா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை!
சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவை நிறுவியவருமான எம்ஜிஆரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் டிடிவி தினகரன் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும் டிடிவி தினகரன் மரியாதை செய்தார்.












Click it and Unblock the Notifications