ஃபெரா வழக்கில் தண்டனை பெற்ற டிடிவி தினகரன் வேட்புமனுவை ஏற்கக் கூடாது... ஹைகோர்ட்டில் அதிரடி மனு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஃபெரா வழக்கில் தொடர்புடைய டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்யவுள்ள வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஃபெரா வழக்கில் தொடர்புடைய டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்யவுள்ள வேட்புமனுவை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் மனு தொடரப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடவுள்ளார். ரூ. 31 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் தொடர்புடையவர் என்பதால் அவருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இதேபோல் ஃபெரா வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது முரணானது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். ஃபெரா வழக்கில் தொடர்புடைய தினகரனின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று உத்தரவிட கோரி சென்னை ஹைகோர்ட்டில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வேட்புமனுவை ஏற்க கூடாது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மட்டுமே போட்டியிட தடை என்ற தேர்தல் விதியை திருத்தி வழக்கில் தொடர்பிருந்தாலோ அல்லது நிலுவையில் இருந்தாலோ போட்டியிடக் கூடாது என உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications