டிசம்பர் 5ல் ஜெ. சமாதி நோக்கி அமைதி ஊர்வலம்... டிடிவி தினகரன் அறிவிப்பு!
டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவுதினத்தன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்று தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை : டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவுதினத்தன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : இந்திய அரசியலில் நிகரில்லாத தலைவராகவும், பன்னாட்டு தலைவர்கள் போற்றியவருமான ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் டிசம்பர் 5ம் தி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவின் பேரில் இந்த மவுன் அஞ்சலி ஊர்வலம் நடக்கும். மேலும் ஊர்வலத்தின் இறுதியில் ஜெயலலிதா சமாதிக்கு மலர் வளையம் வைத்து, உறுதி மொழி ஏற்கப்படும். டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications