திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்த விவகாரம்... விசாரிக்க குழு அமைப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வெளிகிரி பிரகாரம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கார்த்திகை மாதம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். விபத்தையடுத்து கோயிலின் நடை சாத்தப்பட்ட நிலையில் பரிகார பூஜை செய்யப்பட்டு கோவிலின் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, அறநிலையத்துறை, பேரூராட்சி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக விசாரணை மேற்கொள்வர். கோவில் பிரகாரத்தில் உள்ள 40 முதல் 45 ஆண்டு காலம் பழமை வாய்ந்த கட்டிடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்று ஆட்சியர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications