தூத்துக்குடி மக்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.. முதல்வர் சட்டசபையில் அறிக்கை
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வருடத்தில் இரண்டாவது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. காலை பத்து மணிக்கு கூட்ட தொடர் தொடங்கி உள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

முக்கியமாக சட்டசபை கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விவாதம் நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி மக்கள் யாரும் உணர்ச்சிவசப்பட கூடாது. மற்றவர்களின் பேச்சைக்கேட்டு மக்கள் போராட்டம் செய்ய கூடாது. அரசுக்கு நெருக்கடி கொடுக்க யாரும் நினைக்க வேண்டாம்.
அரசை வீழ்த்த வேண்டும் என்று சில கட்சிகள் நினைக்கிறது. சில இயக்கங்கள், கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மக்களை தவறாக வழிநடத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
மக்களுடன் சில அமைப்புகள் சேர்ந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியது. வன்முறை கைமீறி போன காரணத்தால் அரசு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது, என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications