நான் தீ வைக்கல.. முன்ஜாமீன் கோரி வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனு!
திண்டுக்கல் அருகே டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுரை: திண்டுக்கல் அருகே டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடியது, என்எல்சியை முற்றுகையிட்டது உள்ளிட்ட வழக்குகளில் வேல்முருகன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் திண்டுக்கல் அருகே டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேல்முருகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் சுங்கச்சாவடி வழக்கில் சிறையில் இருந்ததால் தீ வைப்பு சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications