காவிரி மேலாண்மை வாரியம்: அதிமுக எம்பிக்கள் 5 பேர் மட்டும் ராஜினாமா செய்ய முடிவு?
அதிமுக எம்பிக்கள் 5 பேர் மட்டும் ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அதிமுக எம்பிக்கள் 5 பேர் மட்டும் ராஜினாமா செய்ய முடிவு?- வீடியோ
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் உட்பட 5 பேர் மட்டும் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் கெடுவும் முடிந்துவிட்டது.

அதனால் அதிமுக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் ராஜினாமாவுக்கு பதில் தற்கொலை செய்வோம் என்றார் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்.
இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் ஆகிய 2 பேர் ராஜினாமா செய்யப் போவதாக முதல்வர் எடப்பாடியாரிடம் கூறியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அன்வர் ராஜா, திருத்தணி ஹரி, கோவை நாகராஜன் ஆகியோரும் எம்பி பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவெடுத்துள்ளனராம். இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications