மதுரையில் வெடித்தது 'டைமர்' பொருத்தப்பட்ட சக்தி குறைந்த வெடிகுண்டு - போலீஸ்
மதுரை: மதுரையில் நேற்று இரவு வெடித்த வெடிகுண்டு மிகவும் சக்தி குறைந்த, டைமர் பொருத்தப்பட்ட வெடிகுண்டு என்று போலீஸார் கூறியுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு குண்டுதான் சைக்கிள் ஒன்றில் வெடித்தது. அதே பாணியிலான குண்டுதான் இதுவும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகை வைகை ஆற்றங்கரை ஓரமாக அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம். அதுபோல நேற்று சேலம் மற்றும் ஓசூர் செல்ல வேண்டிய பஸ்களை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்தப் பேருந்துகளில் திடீர் என வெடிச் சத்தம் கேட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். போலீஸாரும் விரைந்து வந்தனர். கமிஷனர் சைலேஷ் குமார் யாதவும் விரைந்து வந்தார். விசாரணைக்குப் பின்னர் முழுவிவரம் தெரியும் என போலீஸ் கமிஷனர் கூறியிருந்தார்.

பீதியை ஏற்படுத்த திட்டமா?
இந்த நிலையில் வெடித்தது சக்தி குறைந்த வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது. மேலும் அதில் டைமரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுகள் பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டும் இதேபோல சைக்களில் ஒன்றில் வெடிகுண்டு வெடித்தது. அதே வகை குண்டுதான் தற்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று போலீஸார் கூறுகிறார்கள்.

9.5க்கு முதல் குண்டுவெடிப்பு
முதல் குண்டு 9.05 மணியளவில் சேலம் பஸ்ஸில் வெடித்தது. சீட்டுக்குக் கீழே வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டு மிக மிக குறைந்த சக்தி கொண்டது. எனவே சீட் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. அடுத்த குண்டு ஓசூர் பஸ்சில் வெடித்தது. இது சற்று கூடுதல் சக்தி வாய்ந்தது. எனவே பஸ்சின் தகர சீட்கள் பிய்த்துக் கொண்டு போயுள்ளன.

வயர்கள், டைமர் கண்டுபிடிப்பு
போலீஸார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் பிளாஸ்டிக் டப்பா, வயர்கள், வெடிகுண்டில் இருந்த பொருட்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். இவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்கூட்டியே வெடித்ததால் விபரீதம் தவிர்ப்பு
இந்த வெடிகுண்டுகளை 11.30 மற்றும் 12.30 ஆகிய நேரங்களில் வெடிக்குமாறு டைம் செட் செய்து வைத்திருந்தனர். ஆனால் முன்கூட்டியே அவை வெடித்து விட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. காரணம் முதல் பேருந்து 11.45 மணிக்கும், 2வது பேருந்து 12.30க்கும் கிளம்பவிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின்போது இரு பேருந்துகளின் டிரைவர்களும், கண்டக்டர்களும் பஸ் மீது தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications