For Daily Alerts
Just In
திருவண்ணாமலையில் ஒரு எம்.ஏ டாக்டர், ஒரு பிளஸ்டூ டாக்டர் கைது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் எம்பிபிஎஸ் படிக்காமலேயே மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அமைந்துள்ள கிராமம் லாடவரம். அக்கிராமத்தில் அருண் மற்றும் ஷாஜகான் ஆகிய இருவரும் கிளினிக் ஒன்றினை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் போலி மருத்துவர்கள் என்று பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் பற்றிய தகவல் போலீசாரிடம் சென்றடைந்தது.
உடனடியாக விரைந்த போலீசார், அருண் மற்றும் ஷாஜகானை இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் அருண் 12 ஆம் வகுப்பு, ஷாஜகான் எம்.ஏவும் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Two fake doctors arrested in Kalasapakkam, Tiruvannamalai district. There is lot of illegal medicines confiscated from their clinic
Story first published: Thursday, November 27, 2014, 17:40 [IST]