Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுங்கையூர் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: மின்வாரிய அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட்!

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL

    சென்னை: கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரில் பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை தவறுதலாக மிதித்தனர். இதில் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர்.

    Two girls dead by electricity attack in Kodungaiyur: 8 EB officials suspended.

    இந்த சம்பவத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர்.

    Two girls dead by electricity attack in Kodungaiyur: 8 EB officials suspended.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டிருந்தார். மேலும் புகார் பெற்று நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமிகள் உயிரிழந்தது குறித்து கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+