நெல்லையில் இருந்து நூதன முறையில் கலப்பட மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்
நெல்லையில் இருந்து நூதன முறையில் கலப்பட மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெல்லையில் இருந்து நூதன முறையில் கலப்பட மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆவடி அடுத்து நெமிலிச்சேரி பகுதியில் வாகன தணிக்கையின் போது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சென்னைக்கு மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகளை கண்ட லாரி ஓட்டுனர்கள் தப்பியோடிவிட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகளும் பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மணலை சோதனை செய்ததில் பாதிக்கு பாதி சிலிக்கான் கலப்படம் செய்யப்பட்ட மணல் ஆகும்.
மேலும் மீதமுள்ளவை ஜலிக்கப்பட்ட மணல் கற்கள் மொத்தத்தில் 20-30 சதவிகிதம் மணல் மட்டுமே கொண்ட கலப்பட கலவையை செந்நிற எம் சாண்ட் என்ற போலி ரசீதுகள் கொண்டு கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications