தேர்தல் விதிகள்!.. ரசீது இன்றி ரூ. 50,000க்கு மேல் எடுத்து சென்றால் பிரச்சனை வரும்!
சென்னை: உரிய ரசீது இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யார் எடுத்து சென்றாலும் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஒரு சட்டசபை தொகுதிக்கு மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கவும், அங்கு தேவையான போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களை சோதனை செய்வதை கண்காணிக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க தனி பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ரசீது பெறாமல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications