For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி.. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு புகழாரம்!

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நலம் விசாரித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி - சுரேஷ் பிரபு- வீடியோ

    சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நலம் விசாரித்தார்.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று 8வது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையின் காரணமாக கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

     Union Minister Suresh prabu visits Kauvery Hospital

    இந்நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

    அவருடன் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது, மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி என சுரேஷ் பிரபு புகழாரம் சூட்டினார்.

    English summary
    Union Minister Suresh prabu visits Kauvery Hospital. He wished Karunanidhi to recover soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X