சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பை பயன்படுத்தி பயணிகளிடம் திருட்டு
சென்னை: சென்னை சென்ட்ரலில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது ஏற்பட்ட அமளி துமளியைப் பயன்படுத்தி சில ஈன புத்தி படைத்தவர்கள் பயணிகளின் உடமைகளைத் திருடியதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்கின்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார்.இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழந்த நேரத்தில் அங்கு பல்வேறு திருட்டுகளும் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, ஏற்பட்ட பதற்றத்தால் பயணிகளும், ரயில் நிலையத்திற்கு வந்திருந்தோரும் சிதறி ஓடினர். அச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் பெட்டிகளில் இருந்த பயணிகளின் உடைமைகளை திருடி உள்ளதாக கூறப்படுகின்றது.
இக்கட்டான நிலையிலும் கூட, சிலரின் மனிதாபிமானமற்ற இச்செயல் அனைவரிடமும் அதிர்ச்சியையும், மனித மனங்களின் போக்கைப் பற்றிய கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications