முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு கட்ட கேரளா ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளதற்கு வைகோ கண்டனம்
சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கேரள மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் உம்மன்சாண்டி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து இருக்கின்றார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்புகளை வழங்கி உள்ளது. 2010 பிப்ரவரி 18-ல் முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு நடத்திட வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் படி உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்துப் பல கட்டங்களாக ஆய்வு நடத்தியது; அணை பலமாக இருக்கிறது; நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம், சில பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட பிறகு நீர்மட்டத்தை மேலும் உயர்த்தலாம் என்று 2014 மார்ச் 25 ஆம் தேதி ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இதன்பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் நீதிபதிகள் முகுந்தகன் சர்மா, பி.சுதர்சன் ரெட்டி, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முல்லைப் பெரியாறு அணை பற்றிய வழக்குகளை விசாரித்து மே 7, 2014 இல் இறுதித் தீர்ப்பு அளித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து நீதிபதி ஆனந்த் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்பதாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயரம் வரை உயர்த்தலாம்; புதிய அணை கட்டுவதற்காகக் கேரளச் சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் ரத்து செய்கிறோம்; அணையைப் பராமரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்கின்றோம் என்று அந்த அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
ஆனால் நேற்று, முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துவிட்டு புதிய அணை கட்டுவதற்காக, நிதிநிலை அறிக்கையில் கேரள அரசு 100 கோடி ஒதுக்கி இருப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது; கண்டனத்திற்குரியது.
எனவே, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேரள அரசை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications