கோவில்பட்டி தொகுதியில் ஏப்.25ல் வைகோ வேட்புமனு தாக்கல்
சென்னை: கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரும் 25ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் வைகோ, தற்போது மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்குகிறது. கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் வைகோ 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
ஏப்ரல் 25 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வைகோ வேட்புமனு தாக்கல் செய்கிறார். எனவே, ஏப்ரல் 26 ஆம் தேதி வரையிலும் அறிவிக்கப்பட்டு இருந்த வைகோவின் முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் ஒரு சிறிய மாறுதல் செய்யப்படுகிறது.
திருத்தப்பட்ட சுற்றுப்பயண விவரம்:
ஏப்ரல் 25 திங்கள் காலை கோவில்பட்டி வேட்புமனு தாக்கல் மாலை: சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் ஏப்ரல் 26 செவ்வாய் - பிற்பகல் 3 மணி முதல் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவினாசி, பெருந்துறை. ஈரோடு மேற்கு தொகுதிகளில் சுற்றுப் பயணம் ஏப்ரல் 27 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உளுந்தூர்பேட்டை தொகுதி கிராம சுற்றுப்பயணம் தொடர்ந்து விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications