அரசியல் ஞானி வைகோ.. விளம்பரத்துக்காகவே என் பெயரை பயன்படுத்துகிறார்.. ஸ்டாலின் விளாசல்
வைகோ விளம்பரத்துக்காகவே தனது பெயரை பயன்படுத்துவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: விளம்பரத்துக்காகவே வைகோ தனது பெயரை பயன்படுத்துவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெடுவாசல் போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நெடுவாசல் போராட்டத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. திமுக ஆட்சிக் காலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஆய்வுக்காக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதனை அரசியல் ஞானி வைகோ புரிந்து கொள்ள வேண்டும். வைகோவுக்கு என் மீது தனி பாசம் உண்டு. அதனால் தான் விளம்பரம் தேடுவதற்காகவே வைகோ எனது பெயரை பயன்படுத்தி வருகிறார். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications