பூவிருந்தவல்லி நகர செயலாளர், துணை செயலாளர் சஸ்பெண்ட்: வைகோ நடவடிக்கை
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகர செயலாளர் இரா.சங்கர், துணைச்செயலாளர் முருகன் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
மதிமுகவில் இருந்து மூன்று மாவட்ட செயலாளர்கள், கட்சி பொருப்பாளர்கள் பலர் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே இன்னும் பலர் திமுகவிற்கு தாவுவார்கள் என்று கூறப்படும் நிலையில் இன்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகர செயலாளர் சங்கர், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்கு அவர்கள் தெரிவிக்கும் விளக்கம் தலைமைக்கழகம் எற்றுக்கொள்ளும் வகையில் அமையாவிடில் இருவரும் நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து ஏற்கனவே பலர் வெளியேறி வரும் நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சிலரை கட்சியின் பொறுப்புக்களில் இருந்து விடுவித்து வருகிறார் வைகோ.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications