நீட்: மத்திய அரசு, தமிழக அரசுக்கு துரோகம் இழைத்துவிட்டது... வைகோ பாய்ச்சல்
நீட் விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக அரசுக்குத் துரோகம் செய்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல்: நீட் விவகாரத்தில் அதிமுகவை குறை சொல்ல முடியாது. மத்திய அரசுதான் தமிழக அரசுக்கு துரோகம் செய்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் குழுமூர் குக்கிராமத்தைச் சேர்ந்த அனிதா ப்ளஸ்டூவில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர்ந்து டாக்டர் ஆக முடியவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பல அமைப்புகள் போராட்டம் நடத்தின.

தமிழகத்தில் அனைத்து பொதுமக்களும் இளைஞர்களும் நீட் தேர்வாலும் மாநில அரசு செய்த குளறுபடியாலும் மத்திய அரசாலும் தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நீட் விவகாரத்தில் அதிமுக அரசை குற்றம் சொல்ல முடியாது. நீட் விவகாரத்தில் தமிழக அரசு முடிந்த அளவு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் மத்திய அரசுதான் தமிழக அரசுக்கு துரோகம் செய்துவிட்டது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications