சசிகலா புஷ்பா மூலம் ஜெ.வை மிரட்டுகிறார் வைகுண்டராஜன்... சகோதரர் குமரேசன் அதிரடி
சென்னை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி தமிழக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் தொழிலதிபர் வைகுண்டராஜன் மிரட்டுவதாக அவரது சகோதரர் குமரேசன் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக தில்லாக சசிகலா புஷ்பா செயல்படுவதற்கு காரணமே வைகுண்டராஜன்தான் என கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டு தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழக அரசு தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார் வைகுண்டராஜன். இதற்காகவே நியூஸ் 7 என்ற டிவி சேனலையும் அவர் தொடங்கினார்.

இந்த நிலையில் திருச்சி சிவா எம்.பி.யைத் தாக்கிய விவகாரத்தில் சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால் சசிகலா புஷ்பாவோ ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கதறி அழ நாடே அதிர்ந்தது.
ஜெயலலிதாவின் உத்தரவை மீறி சசிகலா புஷ்பா தொடர்ந்து செயல்பட்டு வருவதன் பின்னணியில் விவி மினரல்ஸ் தொழிலதிபர் வைகுண்டராஜன் இருப்பதாக கூறப்பட்டது. அத்துடன் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட அதிமுகவினரை அவர் வளைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, சட்டவிரோதமாக 50 லட்சம் டன் தாது மணலை வெளிநாடுகளுக்கு வைகுண்டராஜன் ஏற்றுமதி செய்துள்ளார்; இதனால் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறினார்.
மேலும், சசிகலா புஷ்பாவுக்கு அனைத்து உதவிகளையும் வைகுண்டராஜன்தான் செய்து தருகிறார். சசிகலா புஷ்பாவை வைத்து முதல்வர் ஜெயலலிதாவையும் அரசாங்கத்தையும் மிரட்டுகிறார் வைகுண்டராஜன்.
சசிகலா புஷ்பாவை மூலமாக ஒட்டுமொத்த நாடார் சமூகத்தை தமக்கு ஆதரவாக திருப்புவதற்கும் முயற்சிக்கிறார் என கூறினார்.
வைகுண்டராஜனின் சகோதரரே சசிகலா புஷ்பாவுக்கு அவர்தான் உதவி செய்கிறார் என பகிரங்கமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications