விஏஒ தேர்வு பிப்ரவரி 28- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி நடக்க இருந்த விஏஓ தேர்வு பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஏஓ பணியில் சேருவோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது.
6 ஆண்டு விஏஓ பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.
வி.ஏ.ஓ. தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications