வர்தா.. மறு உத்தரவு வரும்வரை சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து.. மெட்ரோ இயங்குகிறது
சென்னை விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் புற நகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் விமானங்களால் தரையிறங்க முடியவில்லை. எனவே 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன. அதேபோல, சென்னையில் புற நகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதனால் கடற்கரை, வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் அவதிப்படுகிறார்கள். மறு உத்தரவு வரும் வரை ரயில் சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மெட்ரோ ரயில் இந்த புயலுக்கு நடுவேயும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications