ஹாஹாஹாஹா.. பல்லாவரத்தில் 3வது இடம் பிடித்து மண்ணைக் கவ்வும் வீரலட்சுமி!
சென்னை: பல்லாவரம் தொகுதியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி படு தோல்வி அடைகிறார். கூடவே டெபாசிட்டையும் பறி கொடுக்கிறார்.
பல்லாவரம் தொகுதியில் அதிமுகவின் சி.ஆர். சரஸ்வதி வெற்றி முகத்தில் உள்ளார். திமுகவின் இ.கருணாநிதி 2வது இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் இருக்கிறார் வீரலட்சுமி. 3வது இடம் என்றாலும் கூட அதலபாதாளத்தில் இருக்கிறார் இவர். வெறும் 3117 ஓட்டுக்களுடன் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

பயஙகரமான பில்டப்புடன் சமூக வலைதளத்தில் வலம் வந்தவர் வீரலட்சுமி. வேட்பாளர்களுக்கு ஆள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். இவரை கூட்டணியில் சேர்த்த வைகை, விஜயகாந்த்துக்கும் அறிமுகம் செய்து வைத்து காமெடி செய்தார். இப்படித்தான் பல்லாவரம் தொகுதி வேட்பாளரானார் வீரலட்சுமி.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் கூட வீரலட்சுமிக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவு சுத்தமாக கிடைக்கவில்லை. குறிப்பாக காஞ்சிபரம் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளரான அனகை முருகேசன் தொகுதியை விட்டு ஓடிப் போயிரு என்று வீரலட்சுமியை கூப்பிட்டு மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான் டெபாசிட்டைப் பறி கொடுக்கும் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் வீரலட்சுமி.












Click it and Unblock the Notifications