கோடையில் நிரம்பிய வீராணம் ஏரி!: சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது!!
கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியின் நீர் இருப்பு மொத்தக் கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. மேலும், வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், கோடை முழுவதும் சென்னைக்கு தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் கோடை காலத்தில் இந்தளவு தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு காவிரியில் இருந்து கல்லணை வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.
ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு அதிக அளவு தண்ணீர் எடுக்கப்பட்டதால் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

வீராணம் ஏரிக்கு தண்ணீர்
இதையடுத்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 17-ந்தேதி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து கீழணை மூலமாக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நிரம்பிய ஏரி
நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

குடிநீர் பஞ்சம் வராது
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால், கோடையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு, அந்த நிலை மாறியுள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனவே கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.

குடிநீர் தரும் ஏரிகள்
சென்னையின் குடிநீர் தேவையை சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகிறது. மேலும் மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து வடசென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நெமிலி கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து தென்சென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நீர் வருகை
தற்போது பெய்து வரும் கோடைமழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏரிகளின் நீர்மட்டம்
ஞாயிறு மாலை நிலவரப்படி 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 20.69 அடி நீர் இருப்பும், 17.86 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 4 மில்லியன் கன அடி தண்ணீரும், 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 12.92 அடி தண்ணீரும், 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 960 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது. 8.50 அடி கொண்ட வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு ஏரியும் காலத்திலும் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications