கோடையில் நிரம்பிய வீராணம் ஏரி!: சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது!!
கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியின் நீர் இருப்பு மொத்தக் கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. மேலும், வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், கோடை முழுவதும் சென்னைக்கு தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் கோடை காலத்தில் இந்தளவு தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு காவிரியில் இருந்து கல்லணை வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.
ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு அதிக அளவு தண்ணீர் எடுக்கப்பட்டதால் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

வீராணம் ஏரிக்கு தண்ணீர்
இதையடுத்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 17-ந்தேதி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து கீழணை மூலமாக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நிரம்பிய ஏரி
நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

குடிநீர் பஞ்சம் வராது
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால், கோடையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு, அந்த நிலை மாறியுள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனவே கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.

குடிநீர் தரும் ஏரிகள்
சென்னையின் குடிநீர் தேவையை சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகிறது. மேலும் மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து வடசென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நெமிலி கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து தென்சென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நீர் வருகை
தற்போது பெய்து வரும் கோடைமழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏரிகளின் நீர்மட்டம்
ஞாயிறு மாலை நிலவரப்படி 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 20.69 அடி நீர் இருப்பும், 17.86 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 4 மில்லியன் கன அடி தண்ணீரும், 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 12.92 அடி தண்ணீரும், 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 960 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது. 8.50 அடி கொண்ட வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு ஏரியும் காலத்திலும் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications